புது தில்லி: நேபாள நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் (பிரசண்டா) 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தரவுள்ளார்.
செப்டம்பர் 15-ம் தேதி தில்லி வரஉள்ள புஷ்ப கமல் 18-ம் தேதி இந்தியாவில் இருந்து நேபாளம் புறப்படுகின்றார்.
இந்தப் பயணத்தின் முக்கியத்துவமாக இந்தியா-நேபாளம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.
முன்னதாக, இமாலய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஷரன் மஹத், தில்லியில் இன்று சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.
அப்போது, நேபாள பிரதமர் இந்தியா வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தில்லியில் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.