புது தில்லி: பக்ரீத் பண்டிகையையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்லாமியர்களுககு வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.
பக்ரீத் தினத்தில் நமது மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன், துன்பத்தில் இருப்பவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். மேலும், இத்திருநாளில் நம்பிக்கை, கருணை, தியாகம், மன்னிப்பு போன்ற நற்குணங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 13) பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகின்றது.