

புது தில்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கவலையளிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து மோடி கூறுகையில், கர்நாடக, தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்கள், வன்முறைகள் கவலையளிப்பதாக உள்ளது. பொறுப்புகளை மனதில் வைத்து இரு மாநில மக்களும் செயல்பட வேண்டும். நாட்டின் நலனே முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும். இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகக்கு தீர்வு காண வேண்டும்.
எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.