மும்பை 32 மாடிக்கட்டிடத்தில் தீ விபத்து!

மும்பையின் கண்டிவலி பகுதியிலமைந்துள்ள 32 மாடிக்கட்டிடத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை 32 மாடிக்கட்டிடத்தில் தீ விபத்து!
Published on
Updated on
1 min read

மும்பையின் கண்டிவலி பகுதியிலமைந்துள்ள 32 மாடிக்கட்டிடத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

மும்பையின் கண்டிவலி மேற்கு பகுதியிலுள்ள எஸ்.வி சாலையில் ஹிராநந்தினி டவர் என்னும் 32 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் 32 ஆவது மடியில் இன்று மதியம் 1.09 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக எட்டு தீயனைப்பு எந்திரங்கள், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் மூன்று தண்ணீர் டேங்கர் லாரிகள்  ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

விபத்தில் உயிச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த கட்டிடத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com