ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்க தெலங்கானா அரசு ராணுவத்தின் உதவியை கோரியுள்ளது.
ஹைதராபாத்தின் கச்சிபௌலி, நிஸாம்பெட், அல்வால், ஹகிம்பெட் உள்ளிட்ட இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தின் உதவியை தெலங்கானா அரசு கோரியுள்ளது.
அவர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட முன்வந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளின் வரைபடங்கள் மற்றும் தகவல்கள் அவர்களிடம் தரப்படும் என்று கிரேட்டர் ஹைதராபாத் நகராட்சியின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீடுகளில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆந்திராவில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஹைதராபாத்தில் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


