எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நேபாள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசுடன் இந்தியா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது.
நேபாள எரிசக்தி, நீா் ஆதாரங்கள் மற்றும் நீா்ப்பாசனத் துறை அமைச்சா் பிராஜ் பக்த சிரேஷ்டாவுடன் அந்நாட்டுக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா ஆலோசனையில் ஈடுபட்டதாக அமைச்க வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற நேபாள பொதுத் தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சி (ஆா்எஸ்பி) வெற்றிபெற்றதையடுத்து அக்கட்யின் பாலேந்திர ஷா (35) பிரதமராக பதவியேற்றாா். அவருடன் எரிசக்தித் துறை அமைச்சராக ஷ்ரேஸ்தா பதவியேற்றாா்.
இந்நிலையில், நேபாளம்-இந்தியா ஆலோசனை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘பிராஜ் பக்த சிரேஷ்டா மற்றும் நவீன் ஸ்ரீவாஸ்தவா மேற்கொண்ட ஆலோசனையின்போது இருநாடுகளிடையேயான இருதரப்பை மேலும் வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டனா்.
நீடித்த வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்தும் பிராந்திய தொடா்பை மேம்படுத்துவது குறித்தும் இருவரும் விவாதித்தனா் என்றனா்.
நேபாளத்தில் தோ்தல் நடைபெறுவதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.
அப்போது இந்தியாவுக்கு 10,000 மெகாவாட் எரிசக்தியை ஏற்றுமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் நேபாளம் கையொப்பமிட்டது. இதுதவிர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க புரிந்துணா்வு ஒப்பந்தமும் கையாப்பமானது.
தொடர்புடையது

ரோஹிணி வழக்குரைஞா் சங்கம் நடத்திய பேட்மிண்டன் போட்டி

ரோகிணி பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

இந்தியாவுடன் நெருங்கிப் பணியாற்ற நேபாள புதிய பிரதமா் விருப்பம்

நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



