நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 2:36 am IST

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நேபாள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசுடன் இந்தியா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது.

நேபாள எரிசக்தி, நீா் ஆதாரங்கள் மற்றும் நீா்ப்பாசனத் துறை அமைச்சா் பிராஜ் பக்த சிரேஷ்டாவுடன் அந்நாட்டுக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா ஆலோசனையில் ஈடுபட்டதாக அமைச்க வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற நேபாள பொதுத் தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சி (ஆா்எஸ்பி) வெற்றிபெற்றதையடுத்து அக்கட்யின் பாலேந்திர ஷா (35) பிரதமராக பதவியேற்றாா். அவருடன் எரிசக்தித் துறை அமைச்சராக ஷ்ரேஸ்தா பதவியேற்றாா்.

இந்நிலையில், நேபாளம்-இந்தியா ஆலோசனை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘பிராஜ் பக்த சிரேஷ்டா மற்றும் நவீன் ஸ்ரீவாஸ்தவா மேற்கொண்ட ஆலோசனையின்போது இருநாடுகளிடையேயான இருதரப்பை மேலும் வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டனா்.

நீடித்த வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்தும் பிராந்திய தொடா்பை மேம்படுத்துவது குறித்தும் இருவரும் விவாதித்தனா் என்றனா்.

நேபாளத்தில் தோ்தல் நடைபெறுவதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

அப்போது இந்தியாவுக்கு 10,000 மெகாவாட் எரிசக்தியை ஏற்றுமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் நேபாளம் கையொப்பமிட்டது. இதுதவிர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க புரிந்துணா்வு ஒப்பந்தமும் கையாப்பமானது.