

புது தில்லி: காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
புது தில்லியில் இன்று முப்படை தளபதிகளும் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள், எல்லைப் பாதுகாப்பு, உரி தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இருந்து எப்படி பதிலடி கொடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், இது 'வழக்கமான' ஒன்றுதான் என்றும், மாதந்தோறும் முப்படைத் தளபதிகளும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுவார்கள் என்றும் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கேரளாவில் இன்று பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவிருக்கும் நரேந்திர மோடி, உரி தாக்குதல் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முப்படை தளபதிகளுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.