ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஹைதராபாத்தில் கன மழை எதிரொலி: தயார் நிலையில் ராணுவம்

தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

News image
Updated On :24 செப்டம்பர் 2016, 6:41 am


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான கட்டுப்பாட்டு அறைகளை தயார் நிலையில் இருக்குமாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநிலம் முழுவதும் 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளனர்.

தேவை ஏற்படின் ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக, தாழ்வான பகுதிகள் பிற பகுதிகளோடு தொடர்பற்ற நிலையில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.