நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்கள் புகைப்படம் எடுக்கத் தடை

நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் பார்வையாளர்கள் யாரும் செல்போனில் புகைப்படமோ அல்லது விடியோவோ எடுத்துக் கொள்ள மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்கள் புகைப்படம் எடுக்கத் தடை
Updated on
1 min read


புது தில்லி: நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் பார்வையாளர்கள் யாரும் செல்போனில் புகைப்படமோ அல்லது விடியோவோ எடுத்துக் கொள்ள மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆம் ஆத்மி எம்.பி. பக்வந்த் மன், தனது செல்போனில் விடியோ எடுத்து அதனை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மத்திய அரசு தரப்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இனி நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் யாரும் புகைப்படம் அல்லது விடியோ எடுத்துக் கொள்ள முடியாது.

நாடாளுமன்ற வளாகம் நாட்டின் மிக முக்கிய இடமாகும். நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கருதியே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தின் இணைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்துக்குள் வரும் ஊழியர்களும், பார்வையாளர்களும் செல்போன் கொண்டு வர அனுமதிக்கப்படும். ஆனால், அதில் புகைப்படம் அல்லது விடியோ எடுக்க தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com