புது தில்லி: நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் பார்வையாளர்கள் யாரும் செல்போனில் புகைப்படமோ அல்லது விடியோவோ எடுத்துக் கொள்ள மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆம் ஆத்மி எம்.பி. பக்வந்த் மன், தனது செல்போனில் விடியோ எடுத்து அதனை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மத்திய அரசு தரப்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இனி நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் யாரும் புகைப்படம் அல்லது விடியோ எடுத்துக் கொள்ள முடியாது.
நாடாளுமன்ற வளாகம் நாட்டின் மிக முக்கிய இடமாகும். நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கருதியே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தின் இணைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்துக்குள் வரும் ஊழியர்களும், பார்வையாளர்களும் செல்போன் கொண்டு வர அனுமதிக்கப்படும். ஆனால், அதில் புகைப்படம் அல்லது விடியோ எடுக்க தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டுக்கான வன்பொருள்கள்: தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


