2015-16ல் 1.5 லட்சம் அறுவை சிகிச்சைகள் செய்து எய்ம்ஸ் சாதனை: ஜே.பி. நட்டா

2015-16ம் ஆண்டில் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 1.5 லட்சம் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
2015-16ல் 1.5 லட்சம் அறுவை சிகிச்சைகள் செய்து எய்ம்ஸ் சாதனை: ஜே.பி. நட்டா
Updated on
1 min read


புது தில்லி: 2015-16ம் ஆண்டில் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 1.5 லட்சம் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

அதே போல, கடந்த ஆண்டில் 30 புற நோயாளிகளுக்கும், 2.5 லட்சம் உள் நோயாளிகளுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

சுகாதாரத்தைப் பேணுவதில் எய்ம்ஸ் மருத்துவமனை அதி முக்கிய பணியாற்றுகிறது. மருத்துவ சிகிச்சை, அறிவியல் ஆராய்ச்சி, மருத்துவக் கல்வி என பல்வேறு துறைகளில் எய்ம்ஸ் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சிறப்பான பணியை ஆற்றி வருவதாகவும் நட்டா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com