பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டிருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து இந்தியா வந்துள்ள முக்கியமான அரசியல் தலைவர், உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் ஜைன மதத் துறவிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
பலூசிஸ்தான் விடுதலைக்காக போராடி வருபவர் மீர் மஸ்தாக் தில்ஷத் பலூச். உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வந்த அவர், அங்குள்ள ஜைன துறவிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
இந்தியவில் ஆய்வுக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அமித் ராய் ஜெயினும் அவருடன் இருந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் மீர் மஸ்தாக் தில்ஷத் பலூச் கூறுகையில், "பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெறும் முகம் மட்டுமே. பாகிஸ்தான் அரசை ராணுவமே நடத்தி வருகிறது' என்றார்.
அமித் ராய் கூறுகையில், "தாங்கள் பலூசிஸ்தானில் படும் கஷ்டங்களையும், எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் ஜைன துறவிகளிடம் பலூச் எடுத்துரைத்தார். பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற ஜைன துறவி ஆசார்ய சுபத்ர முனிஜி மகராஜிடம் ஆசி பெற்றுச் சென்றார்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லியில் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு 80 பேருக்கு பயிற்சி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 2,369 கனஅடியாக அதிகரிப்பு

இளம்பிள்ளையில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி போராட்டம்

ராசிபுரத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சோதனை: 12 வாகனங்கள் பறிமுதல்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


