தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலை: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று ஞாயிற்றுக்கிழ்மை ஸ்ரீநகரில் திறந்து வைத்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:11 pm

DIN

ஸ்ரீநகர்: நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று ஞாயிற்றுக்கிழ்மை ஸ்ரீநகரில் திறந்து வைத்தார்.

காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.28 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ரூ3,720 கோடி செலவில் உருவான செனானி - நஷ்ரியை இணைக்கும் நாட்டிலேயே மிக நீளமான இந்த சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.  மட

இந்த பாதை மூலம், ஜம்மு - ஸ்ரீநகர் இடையேயான பயண தூரம் 31 கி.மீட்டராக குறைக்கப்படும். மேலும், பயண நேரமும் 2 மணி நேரம் அளவுக்கு குறையும். இந்த பாதையால் தினமும் ரூ.27 லட்சம் அளவுக்கு எரிபொருள் சேமிக்கப்படும்.

கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாதவாறு வகையிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தாங்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் இச்சுரங்க சாலை கட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு 2011-ம் ஆண்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டினார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு விட திட்டமிட்டு இருந்தது. ஆனால் பல காரணங்களால் பணிகள் தடைபட்டன. தற்போது பணிகள் நிறைவடைந்து இன்ற திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.