கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஈரானில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் விடுவிப்பு

ஈரானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 7:12 am

தினமணி

ஈரானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், ஈரானின் கடல் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக அந்நாட்டு கடற்படையால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்காக அவர்கள் வேலை செய்து வந்தனர். ஈரானில் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் பயணம் செய்த 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, டுவிட்டர் வலைதளத்தில் அவர் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
ஈரானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலைக்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள இந்தியத் தூதரகம் பெருமுயற்சி எடுத்தது. அதற்காக, அத்தூதரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த செய்தியில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.