புது தில்லி: 2 ஆயிரம் ரூபாயைத் தொடர்ந்து புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க வேண்டும் என்ற பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் நடைபெற்ற வங்கியின் மூத்த அதிகாரிகள் தலைமையிலான கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்த திட்டத்துக்கு அதிகாரப்பூர்வ அனுமதி அளித்ததும், புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் வரும் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போதே உயர் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்ற செய்திகள் வெளியாகின. முதலில் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியாகின. தற்போது 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. ஆனால், அப்போது 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றவில்லை. மாறாக தற்போது 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டாசு வெடித்து விபத்து! 12 பேர் பலி! 40 பேர் படுகாயம்! | Kerala

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


