பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் 'லீவ்' விட்டால் அவ்ளோதான்: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!

பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை விட்டால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் 'லீவ்' விட்டால் அவ்ளோதான்: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

சென்னை: பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை விட்டால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கும் என்றும், அத்துடன் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்கக் கூடாது என்றும், வாடிக்கைகையாளர்கள் பெட்ரோல் கிடைக்காமல் அவதிப்படுவதாக புகார்கள் வந்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com