ராணிபுரா: மத்தியப் பிரதேசம் மாநிலம் இன்டோர் மாவட்டத்தின் ராணிபுரா பகுதியில் உள்ள பட்டாசு வெடிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பல லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும். தீ விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.