பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குஜராத்தில் தலித்துகளின் நிலைமை மிகவும் மோசம்

குஜராத்தில் தலித்துகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :28 ஏப்ரல் 2017, 7:20 pm

DIN

குஜராத்தில் தலித்துகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் குஜராத் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், லக்னௌவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாயாவதி பங்கேற்றுப் பேசியதாவது:
குஜராத்தில் தலித்துகள், மலைவாழ் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பெருமுதலாளிகளும், செல்வந்தர்களுமே அங்கு ஆட்சி புரிந்து வருகின்றனர். இதனால், அங்கு சமுதாயக் கட்டமைப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. குஜராத்தில் வாழும் முஸ்லிம்களிடம் அதிகப்படியான பாகுபாடு காட்டப்படுகிறது. உரிய நீதி கிடைக்க வழியின்றி, அவர்கள் தவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணையும்பட்சத்தில், வரும் தேர்தலில் பாஜக-வை எளிதில் வீழ்த்திவிட முடியும் என்றார் மாயாவதி.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.