சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அருணாசலப் பிரதேசத்துக்கு சீனா உரிமை கோருவது அர்த்தமற்றது: சீன அரசியல் வல்லுநர்

இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்துக்கு சீனா உரிமை கோருவது அர்த்தமற்றது என்று அந்நாட்டின் அரசியல் வல்லுநர் வாங் டவோ டவோ கூறியுள்ளார்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2017, 7:39 pm

DIN

இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்துக்கு சீனா உரிமை கோருவது அர்த்தமற்றது என்று அந்நாட்டின் அரசியல் வல்லுநர் வாங் டவோ டவோ கூறியுள்ளார்.
இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்த மாநிலத்தில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து, அருணாசலப் பிரதேசத்தின் 6 பகுதிகளுக்கு சீனா தங்கள் அரசு சார்பில் பெயர் சூட்டியது. அருணாசலப் பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமையை மீண்டும் உறுதி செய்யும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, அந்நாட்டின் அரசு ஊடகம் தகவல் வெளியிட்டது.
ஆனால், அருணாசலுக்கு தலாய்லாமாவுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, 'அருணாசலப் பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி' என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இந்நிலையில், சீனாவின் பிரபல 'ஜின்சூ டாட் காம்' இணையதளத்தில், அந்நாட்டு அரசியல் வல்லுநர் வாங் டவோ டவோ எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்ச்சைக்குரிய அந்த மாநிலம் தொடர்பாக, இந்தியா-சீனா இடையே பல்லாண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. எனினும், சீனாவை பொருத்தவரை, அந்தப் பகுதி குறைந்த மதிப்புடையதுதான். அதனை ஒரு சொத்தாகக் கருத முடியாது. அப்பகுதிக்கான பொருளாதார, அரசியல் நிர்வாகத்துக்கான செலவுகள் மிக அதிகம். இதனால், அப்பகுதிக்கு உரிமை கோருவது அர்த்தமற்றது. இப்பிரச்னையை தீர்க்க போரில் ஈடுபடுவது என்பது சீனாவுக்கு கடினமான முடிவாகவே இருக்கும். அதுபோன்ற முடிவை எடுப்பது, திபெத்தின் இதர பகுதிகளில் பிரிவினையை மேலும் வலுப்படுத்தவே செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
சீனாவில் அரசின் நிலைப்பாடுகளுக்கு மாறாக பிரபல அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறுவது என்பது மிக அரிதாகவே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாசலப் பிரதேசம் மட்டுமன்றி சிக்கிமின் டோகாலாம் பகுதியிலும் சீனா-இந்தியா இடையே எல்லைப் பிரச்னை நிலவுகிறது. அந்தப் பகுதியை ஆக்கிரமித்து சாலை அமைக்க, சீனப் படைகள் மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அங்கு இரு நாடுகளும் படைகளைக் குவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.