டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வெங்கய்ய நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

நாட்டின் 13-ஆவது துணைக் குடியரசுத் தலைவராக வெற்றிபெற்ற வெங்கய்ய நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:36 pm

DIN

துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வருகிற 10-ந் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து நாட்டின் 13-ஆவது துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. 

இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெங்கய்ய நாயுடு 516 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெங்கய்ய நாயுடு வெற்றிபெற்றதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில், நாயுடுவுடன் பாஜக அரசாங்கத்தில் இணைந்து பணியாற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:

13-ஆவது துணைக் குடியரசுத் தலைவராக வெற்றிபெற்ற வெங்கய்ய நாயுடு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் மதிப்பு உயரும் வகையில் சிறப்பான முறையில் வெங்கய்ய நாயுடு செயல்படுவார் என நம்புகிறேன். 

இந்தியாவின் வளர்ச்சிக்கு எப்போதுமே அவர் துணை நிற்பார். இதுபோன்ற சிறந்த சிந்தனைகளையும், கொள்கைகளும் உள்ள ஒருவர் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.