மும்பை: தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான சமயத்தில், சுமார் 900 கிலோ தக்காளியைத் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மும்பையின் புறநகர்ப் பகுதியான தஹிசரில் உள்ள காய்கறி சந்தையில் உள்ள கடை ஒன்றில் இருந்து கடந்த ஜூலை 18ம் தேதி சுமார் 900 கிலோ தக்காளி காணாமல் போனது. இந்த சம்பவத்தில், சுமார் 57 ஆயிரம் மதிப்புள்ள தக்காளியை டெம்போவில் வைத்து திருடிச் சென்ற ராதேஷ்யாம் குப்தா (54) கைது செய்யப்பட்டார்.
கடையின் அருகில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குர்லாவில் இருக்கும் குப்தாவின் வீட்டில் வைத்து காவல்துறையினர் கடந்த மாதம் அவரை கைது செய்தனர். அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
குப்தா ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்று தெரிய வந்துள்ளது. மேலும் தக்காளி திருடிய சம்பவத்தில் அவர் மேலும் சிலருடன் சேர்ந்து ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட போது தக்காளி ஏற்றி வந்த வாகனங்களுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டதும், காய்கறி சந்தைகளில் தக்காளி கடைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டதும் நினைவிருக்கலாம்.
மேலும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் தக்காளி வங்கியும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


