மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிலோ நூறு ரூபாய்க்கு விற்ற தக்காளியை திருடிய நபர் கைது

தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான சமயத்தில், சுமார் 900 கிலோ தக்காளியைத் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2017, 10:36 am

DIN


மும்பை: தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான சமயத்தில், சுமார் 900 கிலோ தக்காளியைத் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மும்பையின் புறநகர்ப் பகுதியான தஹிசரில் உள்ள காய்கறி சந்தையில் உள்ள கடை ஒன்றில் இருந்து கடந்த ஜூலை 18ம் தேதி சுமார் 900 கிலோ தக்காளி காணாமல் போனது. இந்த சம்பவத்தில், சுமார் 57 ஆயிரம் மதிப்புள்ள தக்காளியை டெம்போவில் வைத்து திருடிச் சென்ற ராதேஷ்யாம் குப்தா (54) கைது செய்யப்பட்டார்.

கடையின் அருகில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குர்லாவில் இருக்கும் குப்தாவின் வீட்டில் வைத்து காவல்துறையினர் கடந்த மாதம் அவரை கைது செய்தனர். அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

குப்தா ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்று தெரிய வந்துள்ளது. மேலும் தக்காளி திருடிய சம்பவத்தில் அவர் மேலும் சிலருடன் சேர்ந்து ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட போது தக்காளி ஏற்றி வந்த வாகனங்களுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டதும், காய்கறி சந்தைகளில் தக்காளி கடைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டதும் நினைவிருக்கலாம்.

மேலும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் தக்காளி வங்கியும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.