அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குடியரசுத் தலைவருடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு

தமிழகத்தில் பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வலியுறுத்தினர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:47 pm

DIN


புது தில்லி: தமிழகத்தில் பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வலியுறுத்தினர்.

திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டிகேஸ் இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி,  திருச்சி சிவா, இடது சாரி எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி, டி. ராஜா மற்றும் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினர்.

அப்போது, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வகையில் சட்டப்பேரவையைக் கூட்டுமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிக்கை வைத்தனர்.

மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான வழக்குகள் மற்றும் தீர்ப்புகளையும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.