புதுதில்லி: இரு பிரிவுகளாக பிரிந்து போராடும் சமாஜவாதி கட்சியின் 'சைக்கிள்' சின்னம் யாருக்கு எனபது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார்.
விரைவில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் சமாஜவாதி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துப் பேசிய ஜைதி கூறியதாவது:
சமாஜவாதி கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது ஒரு ஊகத்தின் அடிப்படையிலான கேள்வி. இரு தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன. அந்த ஆவணங்களை பரிசீலித்த பின் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக தாங்கள்தான் உண்மையான சமாஜவாதி கட்சி என இரு பிரிவுகளாக பிரிந்து போராடும் முலாயம் சிங் மற்றும் அவரது மகனும் உத்தரபிரதேச முதல்வருமான அகிலேஷ் சிங் ஆகிய இரு தரப்பினரும் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை அடுத்தடுத்த நாட்களில் சந்தித்து மனு கொடுத்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 17,258 கோடி லாபம் ஈட்டிய ஹெச்பிசிஎல்!!

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

