புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்படுவதாக மத்திய சட்டத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


புதுதில்லி: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்படுவதாக மத்திய சட்டத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்பொழுது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நஜீம் சைதியின் பதவிக்காலம் வரும் 8-ஆம் தேதியோடு முடிவடைகிறதது. எனவே அவருக்குப் பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையராக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தினைச் சேர்ந்த குமார், 1975-ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணிக்கு தேர்வானவராவார்.
இவர் குஜராத் மாநிலத் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவராவார். குமார் வரும் 9-ஆம் தேதியன்று பதவி ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...