ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பொறுப்பேற்பு! 

இந்தியாவின் 21-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி இன்று தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
Updated On :6 ஜூலை 2017, 10:58 am

புதுதில்லி:  இந்தியாவின் 21-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி இன்று தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த நஜீம் சைதியின் பதவிக்காலம் இன்றோடு முடிவடைவதால், இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்படுவதாக, கடந்த செவ்வாய் அன்று மத்திய சட்டத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

குஜராத் மாநிலத்தினைச் சேர்ந்த அச்சில் குமார் ஜோதி, 1975-ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணிக்கு தேர்வானவராவார். இவர் குஜராத் மாநிலத் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவராவார். பதவியேற்ற இன்றிலிருந்து அவர் எட்டு மாதங்களுக்கு இந்த பதவியிலிருப்பார் என்று தெரிகிறது

பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோதி, 'வழக்கம் போல இந்தியாவில் எல்லா தேர்தல்களையும் நேர்மையாக, சுதந்திரமாக, நம்பிக்கைக்குரிய முறையில் அனைவரையும் ஒன்றிணைத்து நடத்த தேர்தல் ஆணையம் பாடுபடும்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.