புது தில்லி: ஆதார் அட்டை தொடர்பான வழக்கு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் ஆதார் எண் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.