விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாட்டிறைச்சி தடை விவகாரம்:  மேலும் ஒரு  மேகாலயா மாநில பாஜக தலைவர் ராஜிநாமா! 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மேலும் ஒரு  மேகாலயா மாநில பாஜக தலைவர் ராஜிநாமா செய்துள்ளார்.

News image
Updated On :6 ஜூன் 2017, 11:42 am

துரா (மேகாலயா): மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மேலும் ஒரு  மேகாலயா மாநில பாஜக தலைவர் ராஜிநாமா செய்துள்ளார்.

1960-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, கால்நடை சந்தைகளில், இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளப்பியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில், மாட்டிறைச்சி  முக்கிய உணவாக விளங்குகிறது. எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என முதலில் செய்திகள் பரவியது.

மத்திய அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேகாலயா மாநில பா.ஜனதா மாவட்ட தலைவர் பெர்நார்த் மராக் சிலநாட்களுக்கு முன்பாக கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் பாஜகவுக்கு மேலுமொரு அதிர்ச்சியாக மேகாலயா பா.ஜனதாவின் வடக்கு காரோ ஹில்ஸ் மாவட்ட தலைவர் பாச்சு மாராக், தன்னுடைய கட்சி பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

தனது இந்த முடிவு குறித்து  பாச்சு மராக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என்னுடைய 'காரோஸ்' சமூதாய உணர்வுகளில் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது. மாட்டிறைச்சி சாப்பிடுவது என்பது எங்களுடைய கலாச்சாரம். பாரதீய ஜனதாவின் புரித ல் அற்ற ஒரு சித்தாந்தத்தை எங்கள் மீது திணிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.