வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை வழங்கி, அது பௌன்ஸ் செய்யப்பட்டால், காசோலை வழங்கியவரை சிறையில் தள்ளும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காசோலை மோசடிக்கு தற்போதிருக்கும் தண்டனையை திருத்தி, பிணையில்லாத சிறைத் தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் காசோலை மோசடி தொடர்பாக பதிவு செய்யப்படும் 20 லட்சம் வழக்குகளை குறைக்கும் வகையில் மத்திய சட்ட மற்றும் சீர்திருத்தத் துறை இந்த சட்ட மசோதாவை வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற உள்ளது.
புதிய சட்ட திருத்த மசோதாவில், காசோலை பவுன்ஸ் செய்யப்பட்டால் அது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக நீதிமன்றத்துக்கு வரும். அங்கே, நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை தீர்த்துக் கொள்ள இரு தரப்புக்கும் கால அவகாசம் ஒதுக்கப்படும். தவறினால், காசோலை கொடுத்தவர் சிறைக்கு அனுப்பப்படுவார். ஜாமீன் வழங்க கடும் நிபந்தனை விதிக்கப்படும்.
அதோடு, காசோலையில் குறிப்பிட்ட தொகையை, குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் செலுத்தினால் மட்டுமே அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘நரகக் குழிகள்’: இந்தியா குறித்த சா்ச்சைக்குரிய பதிவைப் பகிா்ந்த டிரம்ப்!

ஆற்காட்டில் வாக்களித்த வேட்பாளா்கள்

காஞ்சிபுரத்தில் வாக்களித்த வேட்பாளா்கள்

மீன ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


