கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சர்ச்சைக்குரிய கருத்து: பாபா ராம்தேவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட்

சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், யோகா குரு பாபா ராம்தேவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை ஹரியாணா மாநில நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

News image
Updated On :14 ஜூன் 2017, 9:19 pm

DIN

சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், யோகா குரு பாபா ராம்தேவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை ஹரியாணா மாநில நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
'பாரத் மாதா கீ ஜே' எனும் கோஷத்தை எழுப்ப முடியாது என்று மறுப்பவர்களின் தலைகளைத் துண்டிக்க வேண்டும் என்று ராம்தேவ் தெரிவித்திருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஹரியாணா மாநிலம், ரோதக்கில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுபாஷ் பத்ரா என்பவர் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை கடந்த் மார்ச் மாதம் விசாரித்த நீதிமன்றம், பாபா ராம்தேவுக்கு சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டது.
அந்த சம்மனை ஏற்று, ரோதக் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 12-ஆம் தேதி வழக்கு விசாரணை வந்தபோது, பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, ராம்தேவுக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்தது. அப்போது ராம்தேவ் ஜூன் 14-ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ரோதக் நீதிமன்றத்தில் இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகவில்லை. எனவே, ராம்தேவுக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.