அயோத்தியில் 20 ஏக்கரில் உருவாகிறது ராமாயண அருங்காட்சியகம்!
அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதற்காக நிலம் ஒதுக்கி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


லக்னோ அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதற்காக நிலம் ஒதுக்கி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.அக்கட்சியின் சார்பாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று முதல்வர் ஆதித்யநாத் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். அதற்காக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ள அவர், இது தொடர்பான கட்டுமானப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதே திட்டமானது முந்தைய அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் பொழுது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பான மனு ஒன்றை பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி இன்று காலைதான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...