ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தென் கொரியாவின் புதிய அதிபர் மூன்-ஜேயினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

தென் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன் ஜேயின்னுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 மே 2017, 4:07 am

DIN

புதுதில்லி: தென் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன் ஜேயின்னுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில், முன்னாள் பெண் அதிபர், பார்க் குன் ஹை, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் கொரிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, மூன் ஜேயின், 41 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, நேற்று அவர், அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார் மூன் ஜேயின்.

புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள மூனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆங்கிலம் மற்றும் கொரிய மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், விரைவில் மூன் ஜெயினை நேரில் சந்தித்து, அவருடன் பணியாற்ற விரும்புவதாக தனது பதிவில் மோடி கூறியுள்ளார்.

    I look forward to meeting H.E. Mr. Moon Jae-in soon and also look forward to working closely as special strategic partners. @MoonJaeIn365

    — Narendra Modi (@narendramodi) May 10, 2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.