

தமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியதே திமுக தலைவர் கருணாநிதிதான் என்று பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தில்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
சசிகலா ஆதரவாளர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்கு அரசியல் காரணம் இல்லை. தமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியதே திமுக தலைவர் கருணாநிதிதான். கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் ஏன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை?.
கருணாநிதி வீட்டில் நடத்தாமல் சசிகலா வீட்டில் சோதனை நடத்தினால் சந்தேகம் வருவது இயல்பு. தமிழக ஆளுநர் பன்வாரிலால் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.