ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

ஆர்.பி.ஐ, இஸ்ரோ உள்ளிட்ட 6000 நிறுவனங்களின் தகவல்கள் விற்பனைக்கு: அதிர வைத்த  இணையதள விளம்பரம்! 

இந்தியாவின் ஆர்.பி.ஐ, இஸ்ரோ உள்ளிட்ட 6000 முக்கிய நிறுவனங்களின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளது என  வெளியாகியுள்ள இணையதள விளம்பரம் ஒன்று  அரசு நிறுவனங்களை அதிர வைத்துள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2017, 1:21 pm IST

புதுதில்லி: இந்தியாவின் ஆர்.பி.ஐ, இஸ்ரோ உள்ளிட்ட 6000 முக்கிய நிறுவனங்களின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளது என  வெளியாகியுள்ள இணையதள விளம்பரம் ஒன்று  அரசு நிறுவனங்களை அதிர வைத்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற இணையதள பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் க்யிக் ஹீலும் ஒன்று. அதன் துணை நிறுவனமான 'சீக்ரைட்' மற்றும் அதன் கூட்டாளி நிறுவனமான 'சிக்ட்ரீ' இரண்டும் இணைந்து நடத்திய இணையதளம் தொடர்பான பாதுகாப்பு ஆய்வுகளில், ஆபத்தான விளமபரம் ஒன்று தெரிய வந்துள்ளது.

சட்டவிரோதமாகச் செயல்படும் 'டார்க் நெட்' என்னும் இணையதள கட்டமைப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான ஆதார், ஐடியா டெலிகாம், மும்பை பங்குச் சந்தை, பிளிப் கார்ட், ஏர்செல்,  ஆர்பிஐ, பி.எஸ்.என் எல் , எஸ் பி ஐ உள்ளிட்ட 6000 நிறுவனங்களின் தகவல்கள் திருடப்பட்டு விற்பனைக்கு உள்ளதாகவும், அதற்காக இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.     

அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவன கணினிகளில் ஐ பி எனப்படும் அடையாள எண்ணையும் மாற்றி சேதங்களை உண்டாக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதியர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக அரசாங்கத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக க்யிக் ஹீலின் மூத்த மேலாண்மை இயக்குனர் ராகுல் ஸ்ரீவத்சவா கூறியதாவது:

எங்களுக்கு இந்த தகவல் தெரிந்த உடன் உடனடியாக தக்க சமயத்தில் அரசுக்கு தெரிவித்து விட்டோம். அந்த தளத்தில் தெரிவித்துள்ளபடி தகவல்களை யாரேனும் வாங்கி விட்டால் அது குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக அமையும். அத்துடன் இந்தியாவிலும் இணைய சேவையிலும் பெரும் பாதிப்பு ஏற்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடத்தப்பட்ட விசாரணையில் தேசிய இணைய பரிமாற்ற மையத்தின் கீழ் வரும் 'தேசிய இணைய பதிவகம்' இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதிவகத்தின் கீழ்வரும்  பாதிக்கப்பட வாய்ப்புள்ள அணைத்து நிறுவனங்களும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் முக்கிய சர்வர்களின் பாஸ்வோர்ட்களை  உடனடியாக மாற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.