அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஷீரடி விமான நிலையம் குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்?

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:44 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக அவருக்கு முறையான அழைப்பை மகாராஷ்டிர விமான நிலைய மேம்பாட்டு நிறுவனம் (எம்ஏடிசி) விடுத்துள்ளது.
இந்தியாவின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு நாளொன்றுக்கு சுமார் 60,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிக பக்தர்கள் வரும் தலமாக இருந்தாலும் இதுவரை அப்பகுதிக்கு விமான சேவைகள் எதுவும் இல்லை. இதன் காரணமாக, புணே அல்லது மும்பை வரை விமானத்தில் பயணித்து, அதன் பிறகு தரைவழி மார்க்கமாக ஷீரடி வரும் நிலை இருந்து வருகிறது.
இந்த சூழலில், அங்கு புதிதாக விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை எம்ஏடிசி மேற்கொண்டு வந்தது. சுமார் 2,750 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.300 கோடி செலவில் அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளது.
கடந்த சில நாள்களாக சோதனை ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விமான நிலையத்தை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அன்றைய தினம் விமான நிலையத்தை ராம்நாத் கோவிந்த் நேரிலோ அல்லது காணொலி முறை மூலமாகவே திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.