அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்

பஞ்சாபில் நீல குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ. 25 வீதம் 2 கிலோ நெய்யும், கிலோ ரூ. 10 வீதம் 5 கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

News image

பஞ்சாப் மாநிலத்தில் எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஜலந்தர் நகரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி.

Updated On :29 ஜனவரி 2024, 4:18 pm IST

பஞ்சாபில் நீல குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ. 25 வீதம் 2 கிலோ நெய்யும், கிலோ ரூ. 10 வீதம் 5 கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது.
இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜலந்தரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், "மாநிலத்தின் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது' என தெரிவித்தார்.
16 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் வீடு கட்டித் தரப்படும். தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு நிலம் வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தபட்சம் ஒருவருக்காவது வேலை வழங்கப்படும்.
ஆராய்ச்சிப் படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். பஞ்சாபில் பிரிவினைவாத போராட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்
படும்.
விவசாயிகள் வருவாய் ஆணையம் அமைக்கப்படும். விவசாயிகளோ, வர்த்தகர்களோ திடீரென உயிரிழந்து விட்டால், அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆணையத்தின் மூலம் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்படும் என்பவை உள்ளிட்ட வாக்குறுதிகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.