கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஊழல்.. பிரிவினை.. பொருளாதாரத் தோல்வி: மோடி அரசுக்கு எதிராக வரிந்து கட்டும் ராகுல்

ஊழல், பிரிவினை மற்றும் பொருளாதாரத் தோல்வி ஆகியவை  மோடி அரசில உச்ச கட்டத்தில் இருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:26 pm

PTI

புது தில்லி: ஊழல், பிரிவினை மற்றும் பொருளாதாரத் தோல்வி ஆகியவை  மோடி அரசில உச்ச கட்டத்தில் இருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டமானது நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து எம்.பிக்கள் மத்தியில் உரையாற்றிய காங்கிரஸ் கலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசில் ஊழல், மக்களிடையே பிரிவினை உண்டாக்குதல், திறமையின்மை மற்றும் பொருளாதாரத் தோல்வி ஆகியவை உச்ச கட்டத்தில் இருக்கின்றன.  

ஆளும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு கோப அலை காணப்படுகிறது. எனவே நமது கட்சி எம்.பிக்கள் கடுமையாக உழைத்து, பொதுமக்களுக்கு 'நல்ல நாள்' விரைவில் வருமென்ற  மோடியின் பொய் உறுதிமொழிக்கு  ஒரு நல்ல மாற்று தர வேண்டும்.

ஜனநாயாகம் மற்றும் சமூக நீதி பேசும் கட்சிகளுக்கும், சர்வாதிகாரம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வினை ஊக்குவிக்கும் கட்சிகளுக்குமிடையேயான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டிய பெரும் பொறுப்பு நாம் அனைவருக்கும் இருக்கிறது.  

அரசியலமைப்பின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் வெறுப்பு, பிரிவினை மற்றும் வன்முறை சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.