முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு காலமானார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாஜ்பாய் மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமரும், உண்மையான இந்திய அரசியல்வாதியுமான அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய தலைமைப் பண்பு, தொலைநோக்கு பார்வை, முதிர்ச்சி, பேச்சுத் திறன் அவரை தன்னிகரற்றவராக நிறுத்தியது. அடல்ஜி எனும் மாபெரும் மனிதரின் இல்லா குறையை அனைவரும் உணருவார்கள்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






