

புது தில்லி: கேரள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்கள் தங்கள் இருப்பிடத்தை மீட்புக் குழுவினருக்குத் தெரியப்படுத்த கூகுள் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்களின் செல்போனில் இணைய வசதி இல்லாவிட்டாலும், தங்களது ஆன்டிராய்ட் ஸ்மார்ட்ஃபோன் அல்லது டேப்லட்டுகளில் தங்கள் இருப்பிடத்தை பதிவு செய்து அதில் பிளஸ் என்பதை இணைத்து பதிவிட்டால் போதும். அவர்களது இருப்பிடத்தின் சரியாக முகவரி மீட்புக் குழுவுக்கு எளிதாகக் கிடைத்துவிடும்.
வாய்ஸ் கால்ஸ் அல்லது எஸ்எம்எஸ்ஸிலும் இந்த பிளஸ் குறியைப் பயன்படுத்தலாம்.
ஒரு முகவரி இணையதளத்தில் கிடைக்கவில்லை என்றால் அதனுடன் பிளஸ் குறியை சேர்த்து தேடினால் கூகுள் மேப்பில் சரியான முகவரி கிடைக்கும். அதுபோலவே இது செயல்படும்.
இந்த பிளஸ் குறியை 6 அல்லது 7 எழுத்துக்கள் மற்றும் எண்கள் மற்றும் நகரத்தின் பெயருடன் பதிவிட வேண்டும்.
கூகுள் மேப்ஸ் செயலில் மீட்கப்பட வேண்டிய நபர் அல்லது குடும்பத்தினர், செயலியின் தேடுதல் பெட்டியில் பிளஸ் குறியைப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.