தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் குறித்து மத்திய அரசு இப்போது எதுவும் யோசிக்கவில்லை: பாஜக தலைவர் கருத்து 

ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு இப்போதைக்கு  எதுவும் யோசிக்கவில்லை என்று பாஜக தேசிய தலைவர் விஜய் வர்கியா கருத்து தெரிவித்துள்ளார்

News image
Updated On :2 டிசம்பர் 2018, 12:02 pm

DIN

கொல்கத்தா: ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு இப்போதைக்கு  எதுவும் யோசிக்கவில்லை என்று பாஜக தேசிய தலைவர் விஜய் வர்கியா கருத்து தெரிவித்துள்ளார். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஆட்சி நிறைவடையும் தருவாயில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் மற்றும்  சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் மத்தியில் ஆளும் பாஜக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், எந்தவிதமான முடிவும் எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. 

இந்நிலையில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு இப்போதைக்கு  எதுவும் யோசிக்கவில்லை என்று பாஜக தேசிய தலைவர் விஜய் வர்கியா கருத்து தெரிவித்துள்ளார். 

இதகுறித்து அவர் கொல்கத்தாவில் ஞாயிறன்று செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக அவசரச்சட்டம் கொண்டுவரும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இப்போதைக்கு இல்லை. 

அதேசமயம், அயோத்தியி்ல ராமர் கோயில் கட்டும் துணிச்சல் பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. ஆனால், ராமர் கோயில் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். 

ராமர் கோயில் விவகாரத்தைத் திசைதிருப்புவதன் மூலம் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற எண்ணி எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. 

இந்த விவகாரத்தில் மக்களின் எண்ணம் சாதகமாக இருந்தால், ஆதரவு அதிகரித்தால் அவசரச்சட்டம் கொண்டுவருவது குறித்து கண்டிப்பாக ஆலோசிப்போம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.