போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்: மாலை 3 மணி நிலவரம்  

இருமாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 59.43 சதவீதமும், தெலங்கானாவில் 56.17 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2018, 11:38 am

சென்னை: இருமாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 59.43 சதவீதமும், தெலங்கானாவில் 56.17 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

200 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் வெள்ளி காலை  8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  மதியம் 1 மணி நிலவரப்படி 41.53% வாக்குகள் பதிவாகி இருந்தது.  மதியம் 2 மணி நிலவரப்படி சுமார் 55% வாக்குகள் பதிவாகி இருந்தது.  மாலை 3 மணி நிலவரப்படி  அங்கு 59.43 சதவீத வாக்குகள் பதிவாகியு ள்ளது. 

அதேபோல 119 இடங்களை கொண்ட  தெலங்கானா சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மதியம் 1 மணி நிலவரப்படி 49.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 3 மணி நிலவரப்படி 56.17 சதவீத  வாக்குகளும் பதிவாகி உள்ளது.

இரண்டு தேர்தல்களிலும் மாலை 5 மணியோடு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, அப்போது வரை வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிகிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.