பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பாஜகவுக்கு எதிராக தில்லியில் கூடிய 21 கட்சித் தலைவர்கள்: மாயாவதி 'ஆப்செண்ட்'  

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க தில்லியில் திங்களன்று கூடிய கூட்டத்தில் 21 கட்சித் தலைவர்கள் கலந்து கண்டனர். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:21 pm IST

புது தில்லி: பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க தில்லியில் திங்களன்று கூடிய கூட்டத்தில் 21 கட்சித் தலைவர்கள் கலந்து கண்டனர். 

பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் திங்கள்கிழமை மதியம் தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தை சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைத்தார். நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், சரத்பவார், தேவகவுடா, பரூக் அப்துல்லா, அரவிந்த் கேஜ்ரிவால், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். எனினும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இக்கூட்டத்தின் பொருள் நிரலில் பாஜக அல்லாத ஒரு மகா கூட்டணியை அமைப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் செயலாற்ற வேண்டிய உத்திகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வகுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தேசிய அளவில் கூட்டணி அமைப்பதா? அல்லது மாநில அளவில் கூட்டணியா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. அதுபோலவே பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது, முக்கியமான பிரச்சார யுக்திகள், பாஜக அரசுக்கு எதிராக மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
முன்னதாக, எதிர்க்கட்சிகள் கூட்டம் நவம்பர் 22-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.