நேபாளத்திலிருந்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி தரகர்களால் இந்தியாவுக்குக் கடத்தப்பட்ட 13 பெண்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் நேபாளத்துக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, மைதி இந்தியா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ண பாண்டே கூறுகையில், 17 முதல் 40 வயது வரையிலான நேபாளப் பெண்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தரகர்கள் இந்தியாவுக்குக் கடத்தியுள்ளனர். பெங்களூரில் 8 பெண்களும், ஆமதாபாதில் 5 பெண்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் காத்மண்டுக்கு செவ்வாய்க்கிழமை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் நேபாள நாட்டின் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர் என்றார்.
வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதியை நம்பி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நேபாளப் பெண்கள் இந்தியாவுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








