மூதறிஞர் ராஜாஜி என அழைப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் நினைவு தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது சிலைக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மலர் மரியாதை செலுத்தினர்.
ராஜாஜி, கடந்த 1878, டிசம்பர் 10-ஆம் தேதி தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் உள்ள தொரப்பள்ளியில் பிறந்தார். தமது 93-ஆவது வயதில் 1972, டிசம்பர் 25-இல் அவர் காலமானார். சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர், வரலாற்றாளர், வழக்குஞைரர் என பன்முகத் தன்மை கொண்டவர். சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக அவர் பதவி வகித்துள்ளார்.
அவரது நினைவு தினத்தையொட்டி, தில்லியில் ராஜாஜி மார்கில் அமைந்துள்ள ராஜாஜி சிலைக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை மலர் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இந்துபாலா, துணைத் தலைவர் கி. பென்னேஸ்வரன், பொதுச் செயலர் இரா. முகுந்தன், பொருளாளர் எம். சத்தியமூர்த்தி, இணைப் பொருளாளர் கே.கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், எம்.சம்பத்குமார், எஸ்.மகேந்திரன், சங்கத்தின் முன்னாள் இணைச் செயலர் பெ.ராகவன் நாயுடு, கர்நாடக சங்கீத சபா செயலர் ஆர்.மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தனுஷ் - 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை
கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்... மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



