தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

மூன்றாவது அணி அமைக்கும் சந்திரசேகர் ராவின் முயற்சி பாஜகவுக்குதான் சாதகம்: காங்கிரஸ் எம்.பி.

பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி பாஜகவுக்கு சாதகமாக அமைவதுடன், அக்கட்சியே மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க தெலங்கானா

Updated On :26 டிசம்பர் 2018, 2:30 am IST


பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி பாஜகவுக்கு சாதகமாக அமைவதுடன், அக்கட்சியே மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மறைமுகமாக உதவி புரிகிறார் என காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் கெளடா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 
மத்தியில் காங்கிரஸ்- பாஜக அல்லாத ஆட்சியை ஏற்படுத்த மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக, பிராந்திய கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான ஒடிஸாவின் நவீன் பட்நாயக், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்களான அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றவர்களை நேரில் சந்தித்து கூட்டாட்சி முன்னணியை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். 
இந்த முயற்சி பாஜகவுக்கே சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் கெளடா நிருபர்களிடம் கூறியதாவது: பிராந்திய கட்சிகளை சேர்ந்த மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து கூட்டாட்சி முன்னணியை ஏற்படுத்த சந்திரசேகர் ராவ் எடுத்து வரும் முயற்சிகள் அனைத்தும் பாஜகவுக்குதான் சாதகமாக அமையும். 
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக பிராந்திய கட்சிகள், மக்கள் செல்வாக்குள்ள கட்சிகளை ஒரே அணியில் ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 
அதேசமயம், கூட்டாட்சி முன்னணி அமைந்தாலும், அவர்களால் ஆட்சியமைக்க முடியாது. இதனால், பாஜகவின் மோடி அரசே மீண்டும் ஆட்சியில் அமர வழிவகுக்கும். 
பாஜகவை வீழ்த்த வேண்டுமானால் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து வலுவான கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு பிராந்திய கட்சிகள் காங்கிரஸுடன் ஒருங்கிணைந்து மதசார்பற்ற கட்சிகளின் மெகாகூட்டணியை ஏற்படுத்த முன்வர வேண்டும். 
அவ்வாறு செய்யாமல் மூன்றாவது அணி உருவாகும்பட்சத்தில் வாக்குகள் சிதறி மோடி அரசே மீண்டும் அமைய வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் ஜனநாயகம், பாதுகாப்பு, சமூக-கலாசார பாகுபாடுகள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். 
சந்திரசேகர் ராவ் தான் மேற்கொள்ளும் முயற்சியை கைவிட்டு, காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்தால் அதை வரவேற்போம். பாஜக கூட்டணியை வீழ்த்த நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும். ஏனெனில், காங்கிரஸால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.