ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

ரூ.100, ரூ.50, ரூ.10ஐத் தொடர்ந்து அடுத்த புதிய நோட்டு இதுவே!

ரூ.100, ரூ.50, ரூ.10ஐத் தொடர்ந்து அடுத்த புதிய நோட்டு இதுவே!புது தில்லி: ரூ.100, ரூ.50, ரூ.10ஐத் தொடர்ந்து புதிய 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட  உள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2018, 3:40 pm IST


புது தில்லி: ரூ.100, ரூ.50, ரூ.10ஐத் தொடர்ந்து புதிய 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட  உள்ளது.

தற்போதிருக்கும் 20 ரூபாய் நோட்டில் இல்லாத புதிய அம்சங்களுடன் இந்த நோட்டு அமையும்.

ஏற்கனவே, புழக்கத்தில் இருக்கும் பழைய நோட்டுகளுடன், தற்போது புதிதாக ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.500 ஆகிய நோட்டுகளை ஆர்பிஐ வெளியிட்டது. அடுத்தபடியாக இதுவரை பயன்பாட்டில் இல்லாத ரூ.200 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட்டது.

ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் அளவிலும் சரி, நிறம் மற்றும் வடிவமைப்பிலும் சரி புதிய நோட்டுகள் வேறுபட்டுக் காணப்பட்டன.

2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான தகவலின் அடிப்படையில் 492 கோடி 20 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் உள்ளது. இது 2018ல் இரட்டிப்பாக்கப்பட்டு 1000 கோடி 20 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்தன.

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் 9.8 சதவிகிதம் 20 ரூபாய் நோட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.