அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வெறும் கைகளால் பள்ளிக்கழிவறையை சுத்தம் செய்த பாரதிய ஜனதா எம்.பி! 

கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது, வெறும் கைகளால் பள்ளிக்கழிவறையை சுத்தம் செய்த பாரதிய ஜனதா எம்.பிக்கு பொதுமக்களின் பாராட்டுகள் குவிகின்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2018, 1:28 pm IST

போபால்: கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது, வெறும் கைகளால் பள்ளிக்கழிவறையை சுத்தம் செய்த பாரதிய ஜனதா எம்.பிக்கு பொதுமக்களின் பாராட்டுகள் குவிகின்றது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதியின் எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா. இவர் தனது தொகுதிக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்பொழுது காஜூஹா என்ற கிராமத்தில் தூய்மைப் பணியில் தொண்டர்களுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது கிராம தொடக்கப் பள்ளிக்கு சென்ற ஜனார்தன் மிஸ்ரா, அங்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த கழிவறைக்கு சென்றார். கழிவறை கோப்பையில் பயப்படுத்தப்படாத காரணத்தினால் அது சேறும் சகதியும் நிரம்பி காணப்பட்டது.

சற்றும் யோசிக்காத ஜனார்தன் மிஸ்ரா உடனடியாக தூய்மைப்பணியில் இறங்கினார். அங்கு இருந்த சேற்றை வெறும் கைகளால் அள்ளி சுத்தம் செய்தார். அவர் கழிவறையை சுத்தம் செய்த விடியோ காட்சி சமுக வலைத்தளங்களால் வைரலாகப் பரவியது 

ஜனார்தன் மிஸ்ராவின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மிஸ்ரா ஏற்கனவே தனது தொகுதியில் சாலைகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் கழிவுவரை சுத்தம் செய்த பொழுது மிஸ்ரா தகுந்த உபகரணங்களை பயன்படுத்தி இருக்கலாம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.