கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கேரள பல்கலை., மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு 

கேரளாவில் உள்ள பல்கலை கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த உறுப்புக் கல்லூரிகளில் திருநங்கை மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:08 pm

DIN

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பல்கலை கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த உறுப்புக் கல்லூரிகளில் திருநங்கை மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

கேரளாவில் ஆட்சி செய்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, சமீபத்தில் திருநங்கைகள் தொடர்பான சமூக மற்றும் பொருளாதர ரீதியிலான ஆய்வு ஒன்றை நடத்தியது.

இதில் 20.35 சதவீதத்தினர் வேலைவாய்ப்பு இன்றியும், 30 சதவீதத்தினர் சுய வேலைவாய்ப்புடனும் உள்ளனர் என்றும், அதற்கு காரணமான கல்வித்தகுதி குறைபாடு பற்றியும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் உள்ள பல்கலை கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த உறுப்புக் கல்லூரிகளில் திருநங்கை மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

இதன்படி  அனைத்து பாடப் பிரிவுகளிலும் திருநங்கைகளுக்காக 2 கூடுதல் இடங்களை ஒதுக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஒதுக்கீட்டு இடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என்றும் கேரள மாநில மேல்நிலை கல்வி துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.