டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பந்த் அறிவிப்பு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:17 pm

ANI

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதையடுத்து அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்தியில் பாஜக அரசுக்கு எதிராக தனது கட்சி தரப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தார்.

கடந்த முறை இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையில், இம்முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சுமித்ரா மகாஜன் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாகக் கூட்டணி அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:

வருகிற 24-ஆம் தேதி செவ்வாய்கிழமை, ஆந்திர மாநிலம் முழுவதும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய பாஜக அரசு நமக்கு செய்துள்ள அநீதியை எதிர்க்கும் விதமாக அமையும். மத்தியில் எந்தவொரு கட்சியாக இருந்தாலும் நாங்கள் ஆதரவு அளிப்போம். ஆனால், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது மட்டுமே எங்கள் நோக்கம் மற்றும் கோரிக்கை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.