காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் ஆட்சேபம் எதுவுமில்லை என்று மஜத தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
புதுதில்லியில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மதச் சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் ஆட்சேபம் எதுவுமில்லை. அதற்கு மஜத கட்சி உறுதுணையாக இருக்கும்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரும் உள்ளனர்.
தோழமை கட்சிகள் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இருந்தாலும், ராகுலுக்கே மஜத ஆதரவு அளிக்கும்.
கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், மஜத ஆகிய இரு கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை.
இருந்தபோதிலும் இருகட்சிகளிடையே கூட்டணி அமைத்து மஜத கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமியை முதல்வர் ஆக்க, ராகுல் காந்தி உறுதுணையாக இருந்தார் என்பதை மறக்க முடியாது என்றார் தேவெ கௌடா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 7 2026) 12 ராசிகளுக்கும்! பொருளாதார நிலை மேம்படும்!






