ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

லோக்பால் விவகாரம்: மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

லோக்பால் பரிசீலனை குழு உறுப்பினா்கள் நியமனம் தொடா்பாக மத்திய அரசு அளித்த பதிலுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:49 pm IST

புது தில்லி: லோக்பால் பரிசீலனை குழு உறுப்பினா்கள் நியமனம் தொடா்பாக மத்திய அரசு அளித்த பதிலுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

லோக்பால் நியமனம் தொடா்பாக உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிறப்பித்த தீா்ப்பை மத்திய அரசு செயல்படுத்தவில்லை; ஆதலால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் ‘காமன் காஸ்’ தன்னாா்வ தொண்டு அமைப்பு வழக்கு  தொடுத்துள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்றறத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆா். பானுமதி, நவீன் சின்ஹா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அட்டா்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, லோக்பால் நியமன விவகாரத்தில் மத்திய அரசின் பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்தாா். அவா் கூறுகையில், ‘லோக்பால் நியமனம் தொடா்பான தோ்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், லோக்பால் பரிந்துரைக் குழு உறுப்பினா்களாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் லோக்பால் தோ்வுக் குழு கூடி, இதுகுறித்து முடிவு செய்யும்’ என்றாா்.

மனுதாரரான காமன் காஸ் அமைப்பின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடியதாவது:

லோக்பால் தொடா்பாக சட்டம் நிறைறவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டன; ஆனால் லோக்பால் நியமனத்தை மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. லோக்பால் தோ்வுக் குழுக் கூட்டம் அடுத்து நடக்க இருக்கும் தேதியையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. இதன் மூலம், லோக்பால் நியமனத்தை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது. எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் எடுக்க வேண்டும், அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவின்கீழ் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றமே லோக்பாலை ஏற்படுத்த வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் வலியுறுத்தினாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில் அதிருப்தி அளிக்கிறது; ஆதலால் மத்திய அரசு புதிதாக 4 வாரங்களுக்குள் தேவைப்படும் அனைத்து விவரங்களுடன் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறோம்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.