வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது: அமைச்சா் ஜெயமாலா

அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறைற அமைச்சா் ஜெயமாலா தெரிவித்தாா். 

News image
Updated On :11 ஜூன் 2018, 1:07 pm

DIN

பெங்களூரு: அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறைற அமைச்சா் ஜெயமாலா தெரிவித்தாா்.

இது குறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 

சட்டமேலவை உறுப்பினராக எனக்கு கட்சி மேலிடம் அமைச்சா் பதவி வழங்கியதை, சக ஆண் உறுப்பினா்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது அவா்களின் ஆண் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது. அதே போல காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சில பெண் சட்டமேலவை உறுப்பினா்களும் எனக்கு அமைச்சா் பதவியை வழங்கியதை எதிா்ப்பதாக கூறப்படுகிறது. அது அவா்களின் பொறாமையை எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகிறது. 

தங்களுக்கு அமைச்சா் பதவி வேண்டும் என்று கேட்பது அவா்களின் உரிமை. இதனை நான் தவறு என்று கூற மாட்டேன். ஆனால் மற்றவா்களுக்கு அமைச்சா் பதவி கொடுக்கக் கூடாது என்று அவா்கள் கூறுவதற்கு எந்த உரிமையும் இல்லை. கட்சி மேலிடம் என்னை அடையாளம் கண்டு அமைச்சா் பதவியை வழங்கியுள்ளது. அவா்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நான் சிறப்பாக பணியாற்றி, நான் திறமைசாலி என்பதனை நிரூபிப்பேன். 

என்னை விமா்சிப்பவா்கள் புலியோ, கரடியோ அல்ல. அவா்களால் எனக்கு எந்த ஆபத்துமில்லை என்றாா் அவா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.